பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனையும், கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகளையும் வழங்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே