தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதனையடுத்து பகலில் மட்டும் ஆம்னி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம், தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது. கொரோனா தொற்று பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பஸ்களை இயக்க மாட்டோம் என அறிவித்து உள்ளன.

இதனிடையே, ஆம்னி பஸ்களை பகலில் மட்டும் இயக்குவோம் என ஒரு சில சங்கங்கள் அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்னி பஸ்களை இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே