மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருக்கிறது – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

87 வயதாகும் மன்மோகன் சிங் நேற்று 8.40 மணி அளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள, இருதயவியல் பிரிவில் அனுமதிக்கபட்டார்.

லேசான வலியைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறின.

அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வட்டாரம் கூறுகையில், “மருத்துவர் நிதிஷ் நாயக் கண்காணிப்பில் மன்மோகன் சிங் உள்ளார்.

ஐ.சி.யு எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் எல்லாம் அனுமதிக்கப்படவில்லை. சாதாரணமான அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. எனினும், கண்காணிப்பு தேவைப்படுவதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-14 வரை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2010-ம் ஆண்டில் இதே மருத்துவமனையில் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே