கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் 0.40% குறைப்பு
4.40% இருந்து 4% ஆக குறைக்கப்பட்ட ரெப்கோ வட்டி விகிதம்
வீட்டுக்கடன், வாகனக்கடன் மீதான வட்டி குறையும்
13 – 32 % உலக பொருளாதாரம் சரிவை சந்திக்கும்
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 0.40% குறைப்பு
உலக பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
இந்தியாவின் 60% உற்பத்தித்துறை கரோனா சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் அமைந்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு
நாட்டின் உற்பத்தி 17% சரிவை சந்தித்துள்ளது
ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன
உணவு தானிய உற்பத்தி 3.7% அளவுக்கு அதிகரித்துள்ளது
காய்கறிகளின் விலையில் நிலையற்ற தன்மை நீடிப்பது கவலை அளிக்கிறது
பல்வேறு துறைகளுக்கான உள்நாட்டு தேவை கவலை அளிக்கும் அளவுக்கு குறைந்துள்ளது
அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம்
மானாவாரி சாகுபடி பரப்பளவு 44% உயர்ந்துள்ளது
ஏப்ரல் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு
தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்
ஜிடிபி வளர்ச்சிக்கான சூழல் இல்லை
சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வசதி
சிறுதொழில்களுக்கு கடன் வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
வீடு, வாகனக் கடன்களுக்கான கடன் தவணையை செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம்
இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்த்யச் செலாவணி கையிருப்பில் உள்ளது
தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம். கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்