திமுகவின் கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு தொகுதியை சேர்ந்த ஒரு வீட்டிற்கு சென்று டீ – போட்டு அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் முதல்முறையாக களம்காணும் குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு ஆதரவான இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு வெற்றிப்பெற தினமும் காலை, மாலை என இருவேளை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று தனது கணவர் சுந்தர்.சி உடன் சென்று வாக்கு சேகரித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று குலாம் அபாஸ் அலிகான் பகுதியில் தீவர பிரச்சாரத்தில் குஷ்பு ஈடுபட்டார். ஓட்டு கேட்டு வந்த குஷ்புவை பார்த்த காதல் தம்பதிகளான முஸ்தபா – சலீன் ரீட்டா அவரை தங்களது வீட்டிற்கு வந்து தேனீர் அருந்த அழைத்தனர்.

அவர்களுக்கு மதிப்பளித்த குஷ்பு முஸ்தபா வீட்டிற்கு சென்றது மட்டுமின்றி, சமையலறைக்குள் நுழைந்து டீ தயாரித்தார்.

பிரச்சாரத்திற்கு வந்த குஷ்பு தங்கள் வீட்டில் டீ போடுவதை ஆச்சர்யத்துடன் முஸ்தபா குடும்பத்தினர் பார்த்தனர்.

பின்னர் அனைவருக்கும் சிரித்த முகத்துடன் டீ கொடுத்த குஷ்பு தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே