கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் திமுக ஐடி பிரிவில் செயல்பட்டு வந்தது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் கடந்த 15ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரல் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து செந்தில்வாசனிடம் 2வது நாளாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளி வந்ததுள்ளது.
அதில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.