குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவுவதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கொரோனா நம் தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நாடே நெருக்கடியான சூழலை எதிர் கொண்டிருக்கும் இந்த வேளையில் சமூகத்தில் மதரீதியாக பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.