கர்ப்பமா இருக்கும்போது அன்னாசி, பப்பாளி சாப்பிட்டா கரு சிதையும்னு சொல்றது உண்மையா? உண்மை இதோ…

சில வகை உணவுகள் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. உண்மையில் அந்த உணவுகள் கருச்சிதைவை…
பொதுவாக கர்ப்ப காலத்தில் சில வகை உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. அந்த கருத்துக்கள் உண்மையான ஒன்றா? பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பார்கள். இந்த இரண்டு பழங்கள் உடம்பிற்கு சூட்டை கொடுக்கும் பழங்கள் என்பதால் இந்த மாதிரியாக கூறுவதுண்டு.
இதுமட்டுமின்றி கர்ப்பமாக இருக்கும் போது பால் குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றும், காபி அல்லது தேநீர் குடிப்பது குழந்தைக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்றும் கூறப்படுவதுண்டு. இதெல்லாம் உண்மையில் ஒரு கட்டுக்கதையா இல்லை இதற்கு பின்னால் எதாவது நியாயமான கருத்துக்கள் உள்ளதா என்று ஊட்டச்சத்து நிபுணர் நமக்கு விளக்கமளிக்கிறார்.
​கர்ப்ப காலம்
ஊட்டச்சத்து மற்றும் கர்ப்பம் என்று வரும்போது மக்கள் பல கட்டுக்கதைகளை வலுவாக நம்புகிறார்கள் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது நிறைய குப்பை உணவை சாப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் அதைத் தான் விரும்புகிறார்கள் . அந்த நேரத்தில் அது கருவை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு இரண்டாவது தெரிவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

​உணவு கருச்சிதைவை ஏற்படுத்துமா
மிதமாக உண்ணும் உணவு ஒருபோதும் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இது கருச்சிதைவுக்கும் வழி வகுக்காது. ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமைக்காத இறைச்சி, சமைக்காத முட்டை, சமைக்காத மூளைகள் மற்றும் கலப்படம் இல்லாத பால், பாதரசம் உள்ள மீன்கள் போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்.

​காபியும் கருச்சிதைவை ஏற்படுத்துமா
மிதமான அளவில் காபி மற்றும் தேநீர் குடிப்பது பிரச்சினை அல்ல. நீங்கள் ஒரு காபி குடிக்கும் நபராக இருந்தால் தினமும் இரண்டு கப்களை சாப்பிடுவதற்கு பதிலாக வாரத்திற்கு 3 முறை என குறைத்து குடியுங்கள்.
​அன்னாசி, பப்பாளி
அன்னாசி, பப்பாளி போன்ற பழங்கள் ஏன் கருச்சிதைவுக்கு காரணம்?

பழுக்காத பப்பாளி மற்றும் அன்னாசிப் பழங்கள் நீங்கள் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் நல்லது கிடையாது.

இதுவே நீங்கள் பழுத்த பப்பாளி பழத்தை ஒரு துண்டு அளவு எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுக்கு எந்த வித தீங்கையும் விளைவிக்காது. இது ஒரு சிறந்த குடல் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவி செய்யும். ஏனெனில் இந்த பழங்களில் உள்ள நொதிகள் மற்றும் பாதுகாப்புகள் சில நேரங்களில் நமக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

​கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு எது
பழங்கள், காய்கறிகள் அல்லது நட்ஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை. ஏனெனில் அவற்றில் கால்சியம், புரதம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

கருச்சிதைவு ஏற்பட முக்கிய காரணம் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைவதாகும். எனவே அதை அதிகரிக்க நீங்கள் உங்கள் உணவில் மென்மையான தேங்காய், மாதுளை மற்றும் அத்திப்பழங்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும். மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நலமுடன் குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே