நாட்டில் இதுவரை 49 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் தகவல் தெரிவித்துள்ளது.
1073-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை 5,791 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் மட்டும் 400-க்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் கூறியுள்ளது.