சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்..!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

இதில் விளையாடுவதற்கான இரு அணி வீரர்களும் கடந்த 6 நாள்களாக தனிமையில் இருந்தனர். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வீரர்கள் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்களை பிசிசிஐ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே