உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் எதுவென்று நாம் பார்த்தால், அது இந்தியாதான் என தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் ஹன்சா மேத்தா ஒருங்கிணைத்த சொற்பொழிவில் இதனை தெரிவித்துள்ளார் அவர். 

“உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி சார்ந்த கொள்கை முடிவுகளில் இந்தியா தனித்து நிற்கிறது என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் எதுவென்று நாம் பார்த்தால், அது இந்தியா தான். 

அதிலும் அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து  வரும் சீரம் இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள்” என அவர்  தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே