2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான கலந்துகொண்ட பேசிய ஓ.பன்னீர்செல்வம்,’கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள், நிர்வாகிகள் விசுவாசமாக இருக்க வேண்டும். எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை.
கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களை மட்டுமே பொறுப்பாளராக போட வேண்டும். பல நூறு ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து இருக்கும்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்.எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் எடுத்துவைக்க அடியும் தூய்மையாக இருக்க வேண்டும்.
நமது அடுத்த இலக்கு 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காகக் கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.