தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது. மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை;

தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது. முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்;

இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனா கட்டுக்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மதியம் ஒரு மணிக்குள் முடிவெடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவினர் தங்களது கருத்துக்களை தெரிந்து தெரிவிக்க வேண்டும்.தமிழகத்திற்கான ஆக்சிஜன் அளவை 519 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டுவர தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே