அசாம் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 86. அசாம் மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவர் தருண் கோகாய்.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிகிச்சைக்குப்பின் கொரோனா தொற்றில் குணமடைந்த பின்னர், கொரானாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பிய அவருக்கு நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், அசாமிலுள்ள குவாஹாத்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் தருண் கோகாய் இன்று காலமானார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே