பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் மாயமானதால் அச்சம்..!!

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை காவல்துறையினரின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்குள் பிரிட்டனிலிருந்து மதுரைக்கு 80 பேர் திரும்பியுள்ள நிலையில் 76 பேரை சுகாதாரத் துறையினர் கண்காணித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை காவல் துறையினரின் உதவியுடன் சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.

4 பேருடைய முகவரிக்கும் சென்று விசாரித்தபோது அவர்கள் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. 

கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

முன்னதாக 76 பேரில் கொரோனோ அறிகுறியுடன் இருந்த 26 பேரை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு உருமாறிய கொரோனோ பாதிப்பா ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவருடைய மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே