திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திண்டுக்கல்லிருந்து திருச்சி சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள மாருதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், திடீரென மூச்சு திணறலுடன் அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக திருச்சியில் உள்ள மாருதி தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிகழ்ச்சிகளிலும், கொளத்தூர் தொகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது மேடையிலேயே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

திரும்பும் இடமெல்லாம் பயமுறுத்தி வந்த கொரோனா, தமிழகத்தில் இப்போது தான் குறைந்துள்ள நிலையில், திமுக தலைவர்கள் அடுத்தடுத்து சுகவீனமாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது திமுக தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் திமுக தலைவர்களின் உடல்நிலை, தொண்டர்களை கலவரப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே