உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 20 ஆண்டுகள் சுகாதாரம் சார்ந்த பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்.
கொரோனாவை இந்தியா முன் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டதாகவும், இந்தியாவில் இறப்பு விகிதம் 3 விழுக்காடாக மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தோரின் விகிதம் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் என்றும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
நோய் இரட்டிப்பாகும் அளவானது 13 நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.