கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை பலியாகியுள்ளவர்களில் ஒருவரை தவிர்த்து, 9 பேரின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இதில் விமானம் இரண்டாக பிளந்தது.
இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள் இருந்தனர்.
இதில் விமானி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இவருடன் சேர்ந்து இதுவரை பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்:
கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தோர்:
1. ஷாகீர் சயீத் (வயது 38)
2. முகமது ரியாஸ் (வய்யது 23) பாலக்காடு
3. பெண் (வயது 45)
4. பெண் (வயது 55)
5. குழந்தை (ஒன்றரை வயது)
எம்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை கோழிக்கோட்டில் உயிரிழந்தோர்:
1) தீபக்
2) அகிலேஷ்
3) அடையாளம் காணப்படாத ஆண்
பேபி நினைவு மருத்துவமனையில் மரணம் அடைந்தவர்கள்
1) ஷாராஃபுதீன்
2) ரஜீவன்