கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவு

கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கல்வித்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்தார்.

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை உள்ளது.

இந்தியாவில் COVID-19 பாதிப்புகளில் இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது.

இன்று விவாதிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று பாடத்திட்டத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நடவடிக்கைகள் இதற்கிடையில் தொடர வேண்டும் என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

புதிய சூழ்நிலைகளை சரிசெய்ய எங்கள் மாணவர்களை தயார்படுத்தும் விதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை வடிவமைப்போம் என்று சிசோடியா கூறினார்.

9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு, வாரங்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிறிய குழுக்களாக வகுப்புகளை அனுமதிக்குமாறு அதிகாரிகள் சிசோடியாவிடம் கேட்டனர்.

இருப்பினும், மற்ற அதிகாரிகள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

சாத்தியமான இடங்களில் பள்ளிகள் ஆன்லைன் நூலகங்களைத் திறக்க வேண்டும் என்று அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

ஒரு வகுப்பில் 12-15 மாணவர்களின் பலத்துடன் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முதன்மை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பள்ளிகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் வகுப்பறை சுத்திகரிப்பு, மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்குதல் மற்றும் பள்ளி வாயில்களில் சானிடைசர் ஆகியவை அடங்கும்.

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வகுப்புகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் மாற்று நாட்களில் நடத்தப்படலாம், மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பரிந்துரைகளின்படி கற்பிக்கப்படலாம்.

டெல்லியில் இன்று 3,390 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நகரத்தில் 73,780 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நிலையில், தேசிய தலைநகரில் இறப்புக்கள் 2,429 ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே