“ரசிகர்களாகிய நீங்கள் அமைதியாக இருங்கள்”, பாலிவுட்-ன் தாதா சல்மான் கானின் பதிவு !!

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களை தன்பக்கம் வைத்திருக்கும் நடிகர்கள் புது திறமைகள் உள்ளே நுழைவதற்கு விடுவதில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வாரிசு நடிகர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்றவர்களை விருது விழாக்களில் அழைத்து ஏளனம் பேசுகிறார்கள். இதனால்தான் நடிகை தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் மிகப் பெரிய புள்ளியாக இருக்கும் நடிகர் சல்மான் கான் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் தன் வசம் வைத்து பல வேலைகளை செய்து வருகிறார் என அவர் நடித்த “தபாங்” பட இயக்குனர் பகிரங்கமாக தெரிவித்தார்.

சுஷாந்தின் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் பல இடங்களில் சல்மான்கான் போஸ்டர்களை அடித்து நொறுக்கி கிழித்து தொங்க விட்டனர். தனது ஹீரோவை பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் கொன்றுவிட்ட ஆதங்கத்தை ரசிகர்கள் இப்படி வெளிக்காட்டினர்.
அதிகார பலத்தை வைத்து நூதனமாக இப்படி பல நடிகர்களை பாலிவுட் பெரிய குடும்பங்கள் செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களிடம் நடிகரின் மறைவிற்கு அவருடைய குடும்பத்துடனும் ரசிகர்களுடன் நாம் நிற்க வேண்டும் எனப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர்கள் திட்டினாலும் அமைதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சல்மான்கானின் இந்த டீவீட்டிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆடுவதா என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே