தமிழகத்தில் இன்று மட்டும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 9,674 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘தமிழகத்தில் இன்று மட்டும், 11,965 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 2,91,432 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
அதன்மூலம் உயிரிழப்பு 66 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழக அரசு சிறப்பான முறையில் சிகிச்சையளித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.