சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டல வாரியாக – முழு விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில், 169 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்களை சென்னை மாநகராடசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் 3,338 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,261 பேருக்கும், திருவிகநகர் மண்டலத்தில் 1,855 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கோடம்பாக்கத்தில் 2,123 பேருக்கும் தேனாம்பேட்டையில் 2,136 பேருக்கும், அண்ணாநகரில் 1,660 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடையாறிலும் கரோனா பாதிப்பு 1,042 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே