கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா வரும் – நடிகர் விவேக் பேட்டி..!!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே