சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 2 பேருக்கு கொரோனா

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 24-ம் தேதி சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த 5 சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே