ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா…212 பேர் பலி… மீண்டும் மோசமாகும் நிலைமை: இந்தியாவில் லாக் டவுன் கன்ஃபார்ம்

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.59 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.16 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 46,951 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,46,081 ஆக உயர்ந்தது.

* புதிதாக 212 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை  1,11,51,468  ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,34,646  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 95.96% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.66% ஆக குறைந்துள்ளது.

*இதுவரை இந்தியாவில் 4,50,65,998 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே