தமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 2,112 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,52,521 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 565 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 25 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,440 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தற்போது 18,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 2,347 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,22,786 பேர் குணமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே