தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பதிப்பு..!!

திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த கொரோனா பெருந்தொற்றால் நடிகர் அமிதாபச்சன் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் திரையுலகினர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி. பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என பலருக்கு கொரோனா தொற்று பரவியது.

இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

இதனால் தமிழ் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் அனைத்து மொழி திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்புள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய சிரஞ்சீவி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வரும் அவர், தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெற்றிபெற்ற வேதாளம் பட ரீமேக்கில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே