இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கேரளாவில் இன்று புதிதாக 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,80,770 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தோற்று பாதிப்புக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 1,668 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7,120 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே