தமிழகத்தில் இன்று (பிப்.03) 514 பேருக்கு கொரோனா..; 4 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,39,866 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 145 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,371 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,001 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 4,494 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே