தமிழகத்தில் இன்று புதிதாக 1,066 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 302 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,314 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,066 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,10,080 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 1,131 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,88,742 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 9,314 பேர் (சிகிச்சை மற்றும் தனிமை) கொரோனா தொற்றுடன் உள்ளனர். இன்று மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 12,024 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இன்று 70,911 மாதிரிகளும், 70,534 பேருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே