தமிழகத்தில் இன்று 21,406 பேருக்கு கொரோனா பாதிப்பு..; 443 பேர் உயிரிழப்பு .!!

தமிழகத்தில் புதிதாக 21 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 ஆயிரத்து 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 16 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 32 ஆயிரத்து 472 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் களில், 443 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர். 4158 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

செங்கல் பட்டில் 862 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 372 பேருக்கும் திருவள்ளூரில் 525 பேருக்கும் திருச்சியில் 651 பேருக்கும் கோவையில் 2663 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே