தளபதி தங்கமானவர் !! இளம் திறமைகளை அழிக்க நினைக்கும் ஹீரோக்கள் மத்தியில் தளபதி மாஸ் !!

திரையுலகில் புதுமுக நடிகர் நடிகைகள் வாய்ப்புகாக காத்துக் கொண்டிருக்கின்றனர். திறமைகள் இருந்தும் சப்போர்ட்டுக்கு ஆளில்லாமல் அவர்களுடைய வாழ்க்கைத் ஜொலிக்காமல் போய்விடுகின்றது.

பாலிவுட் திரையுலகில் பெரிய குடும்பங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பிள்ளைகள் மட்டும் திரையுலகில் ஜொலிக்கின்றனர். காரணம் அவர்களுக்கு பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் ஊடகங்கள் என அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. அவர்களை எதிர்த்து திறமையை நிரூபிக்க நினைத்தால் அவர்கள் வேறுவிதமாக காயை நகர்த்துகின்றனர். இதனால் தான் நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து உள்ளார் என பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தனது பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் வாரிசுகள் அனைவரையும் திரையுலகில் ஸ்டார் ஆக்குவதே முன்னணி நடிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் அவர்கள் இளம் நடிகர்கள் மற்றும் திறமையானவர்களை ஊக்குவிக்கிறார். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சிவகார்த்திகேயன். முதலில் தொகுப்பாளர்களாக இருக்கும் போது தளபதி விஜய் அவருக்கு ஊக்கம் கொடுத்தார். தனது திறமையை நிரூபித்து திரையுலகில் ஒரு இடத்தை பிடித்த சிவகார்த்திகேயனை இன்று வரை தளபதி விஜய் அவரை பல மேடைகளில் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே