திருவாரூரில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவாரூர் மாவட்டத்தில் 22 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 14 முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இதேபோல, 5 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் 781பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டபணிகள் மற்றும் கொரானா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் ஆய்வு நடத்தினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே