சென்னை தலைமைச் செயலக பத்திரிகையாளர் அறை மூடப்பட்டது..!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த தலைமைச் செயலக செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர் ஒருவருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே