பல்கேரியா : பேருந்தில் தீ விபத்து – 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி..!!

53 பேருடன் சென்ற சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில், 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து பல்கேரியா அரசின் உள்துறை அமைச்சக அதிகாரி நிகோலாய் நிக்கோலாவ் கூறும்போது, இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள், தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவை சேர்ந்தவர்கள். இவர்கள், துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஸ்கோப்ஜே நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே