சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என முடித்துவிட்டு தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கருணாஸை காவல்துறை கைது செய்தது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே