#BREAKING : செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரான மஸ்தானுக்கு கொரோனா

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

முன்னதாக, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்த கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது திமுகவில் நான்காவதாக செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே