பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னை-வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை துவங்கி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

நீட் தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

அந்த வகையில் தமிழகம் வந்த மோடிக்கு எதிராக நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என பதிவிட்டிருந்தார். 

இது அவரது ரசிகர்களிடையேவும், இணையவாசிகளிடையேவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi என கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அலெக்ஸ் சுதகார் என்பவர் சென்னை சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், இறையாண்மையை தடுக்கும் வகையிலும் செயல்பட்டதாக கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே