தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் நடத்த BCCI திட்டம்?

தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ள நிலையில், அவருக்கு ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்த கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஐபிஎல் தொடருக்கு பின் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றியுள்ள தோனி, மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டியவர் என அவர் தெரிவித்தார்.

தோனி ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அவருக்கான மரியாதை பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே