விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம்..!!

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற, தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டன் சிறையில் உள்ளார்.

இவர் மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் தற்போது விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 14.34 கோடி) சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கடன் ஏய்ப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே