அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்

தமிழகத்தில் முதன்மைக் கட்சியாக உள்ள அதிமுக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள தள்ளுபடி மானியத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திடும். அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடமும், கட்சியினரிடமும் உள்ளது. இதனை நிறைவேற்றிடும் வகையில், வரும் 7-ம் தேதி அதிமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் சிறந்த முடிவை எடுப்பார்கள், என்றார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே