தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் கோவை பீளமேட்டில் அதிகபட்சமாக ஆறு சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

