மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில் ஜபல்பூர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே