கல்யாணத்திற்கு பெண் வேண்டி போலீஸிடம் உதவி கோரிய இளைஞர்..!!

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில், உயரம் குறைவு காரணமாக, திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், தமக்கு பெண் தேடி தருமாறு போலீசின் உதவியை இளைஞர் ஒருவர் நாடி உள்ளார்.

கைரானாவை சேர்ந்த அசீம் மன்சூரி, கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் தேடி வரும் நிலையில், தாம் 2 அடி உயரம் மட்டுமே இருப்பதை காரணமாக காட்டி பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதால், காவல் நிலையம் சென்று போலீசின் உதவியை நாடி உள்ளார்.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வை சந்தித்து உதவி கேட்ட அன்சாரி, 8 மாதங்களுக்கு முன்பு, கைரானா காவல் நிலையம் சென்று காவல்துறையினர் மூலமாக நீதிபதிக்கும், பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே