அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது, கேஎல் ராகுலுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் 5 ஆட்டங்களும் இந்த மைதானத்தில்தான் நடக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது, ரோஹித் சர்மா அணியில் இல்லாததால், ஷிகர் தவணுடன் இணைந்து கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால், தற்போது இந்திய அணி்க்குள் ரோஹித் சர்மா திரும்பிவிட்டார். தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவதில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால், ரோஹித்துடன் களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது, கேஎல் ராகுலுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் 5 ஆட்டங்களும் இந்த மைதானத்தில்தான் நடக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது, ரோஹித் சர்மா அணியில் இல்லாததால், ஷிகர் தவணுடன் இணைந்து கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால், தற்போது இந்திய அணி்க்குள் ரோஹித் சர்மா திரும்பிவிட்டார். தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவதில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால், ரோஹித்துடன் களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேட்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கோலி பதில் அளிக்கையில் “ இந்த முறையில் அணியில் புதிதாக பல வீரர்களைச் சேர்த்துள்ளோம். வலிமையான பேட்டிங் வரிசைக்கு சரியான வீரர்களைத் தேர்வு செய்வோம். நடுவரிசையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இந்த 5 போட்டிகளையும் நாம் கட்டுபாடுகளின்றி விளையாட விரும்புகிறோம். அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள் இப்போது நமக்குத் தேவை. அதைத்தான் கண்டுபிடிக்கப்போகிறோம். ஆதலால், வீரர்கள் மிகவும் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.