சீரமைக்கவேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன்.
பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.