IPL 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்..?

அடுத்த ஐபிஎல் சீசனில் புதிதாக ஒரு அணியை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இதன் 13வது சீசன் நேற்று (நவ.,10) முடிவடைந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி, ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தி முடித்துள்ளது.

அடுத்த சீசன் 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணியை இணைக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை மையப்படுத்தி 9வது அணியாக சேர்க்க உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே