உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் நேற்றிரவு (சனிக்கிழமை) காலமானார்.
இந்த நிலையில், துரைக்கண்ணு வகித்திருந்த துறைகள் கே.பி. அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அன்பழகனுக்குக் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.