சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு அண்மையில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இளம் வலது கை பேட்ஸ்மென் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில் சஹாருக்கு தொற்று பாதிப்பு இல்லை என உறுதியானதால் சக சென்னை அணி வீரர்களோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் .
கொரோனவுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்கு இல்லை என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வரும் வரை ருத்துராஜ் காத்திருக்க வேண்டும் . அதன்பின்னர் அவர் வலைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்.