பணிநேரக் குறைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டது.
இதனிடையே பணிநேரக் குறைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.